Friday 21 December 2018

ஜீவகாருண்யம்

🌲🍍 ஜீவகாருண்யம். 🍍🌲

சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ 
காரியங்களில் பந்தலை அலங்கரித்துக் -
அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச் 
செய்வித்தும் - ஆடல், பாடல், வரிசை, 
ஊர்வலம் முதலிய விநோதங்களை அப்ப வர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப் பாடுகளையும் நடத்தியும் எக்களிப்பில் 
அழுந்தியிருக்குந் தருணத்தில் -

 பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும், தமது மக்கள், துணைவர் முதலியோர்க்காயினும், ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது. 
அப்போது, அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகின்றார்கள். 

இப்படி துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும், -ஆடல் ,பாடல் 
வாத்தியம் , வரிசை ஊர்கோலம் முதலிய 
வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரா
அன்னம் முதலிய பெருமைப்பாடுகளும் 
அந்த  ஆபத்தை தடை செய்யக்கண்ட 
தில்லை. 

அந்த சுப காரியத்தில் உள்ள
படியே பசித்த ஜீவர்களுக்கு ஆகாரங் 
கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள் 
அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்க 
த்தையும்,கடவுளின்பத்தையும் வெளிப்பட செய்திருந்தார்களானால் 

அந்த விளக்கமும் இன்பமும் அத் தருணத்தில் நேரிட்ட  ஆபத்தை நீக்கி, விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக  உண்டு பண்ணும் 
அல்லவா?,ஆதலின் விவாக முதலிய 
விசேஷச் செய்கைகளிலும் தங்கள்தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென்று அறிய வேண்டும்.   🌹 வள்ளலார் 🌹 

🍒இனிய காலை வணக்கம். 🍒

Thursday 20 December 2018

Today Pasi Atruvithal by Magendran, KRPuram, Bangalore

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

Thursday 13 December 2018

அற்புத மருந்துங்க..

  1. வாழ்க்கையில் - குடும்பத்தில்,
  2. நிம்மதி இல்லையா?பிரச்சனையா?
  3. தீராத வியாதியா?
  4. வியாபாரத்தில் நஷ்டமா?
  5. குழந்தை பாக்கியம் இல்லையா?
  6. கல்வி, அறிவு, செல்வம் வேண்டுமா?
  7. தீர்க்க ஆயுள் வேண்டுமா?
  8. மரணத்தை வெல்ல வேண்டுமா?

கவலை வேண்டாம்...
நல்ல மருந்து...
சஞ்சலம் தீர்க்கும் மருந்து...
சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து...
நம்முள் என்றும் விடாமல் இனிக்கும் மருந்து..
சொல்லால் அளவா மருந்து...
சுயஞ்ஜோதி மருந்து எனும் அருட்பெருஞ்ஜோதி
அற்புத மருந்துங்க..
ஆனந்த மருந்து..
அரிய மருந்துங்க...
பெரிய மருந்துங்க... 
ஞான மருந்துங்க..
இந்த மருந்து எங்கும் விலைக்கு கிடைக்காதுங்க..
விற்க, வாங்க முடியாதுங்க..
புண்ணியம் எனும் ஜீவகாருண்ய ஒழுக்கம் செய்தால் மட்டும் இந்த மருந்து கிடைக்கும்ங்க...
வேரெறங்கும் கிடைக்காதுங்க...

கிடைக்குமிடம்.. .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் ...
வேறு எங்கும் கிளைகள் இல்லைங்க..
நன்றி. வந்தனம்...

Tuesday 11 December 2018

Today Poor Feeding by Thiru Magendran Family

இன்றைய அன்னதானம் திரு.மகேந்திரன் அவர்கள் வழங்கினார்கள். அவர்கள் எல்லா நலமும்,வளமும் பெற்று நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்.

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால்,  அந்தச் 
சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.

Thursday 6 December 2018

Today Poor feeding by Sanmarkka Anbar.Kathir & Family

திரு.கதிர் அவர்கள் நீடுழி வாழ இறைவனிடம் பிரார்த்தனை.

சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் 
சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.

Saturday 1 December 2018

1 Dec 2018 .. Poor Feeding on behalf of Sri.Kalawathy

இன்றைய அன்னதானம் செல்வி.கலாவதி அவர்கள் வழங்கினார்கள். அவர்கள் எல்லா நலமும்,வளமும் பெற்று நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திப்போம்.

பசித்தவர்களுக்குப் பசியாற்றுவித்து இன்பத்தை உண்டு பண்ணுகின்ற சீவகாருண்ய ஒழுக்கமாகிய மேலான விரதமானது தேவர்கள், மனிதர்கள், பிரமசாரிகள், சமுசாரிகள், தவசிகள், சந்நியாசிகள், ஆண்சாதியர், பெண்சாதியர், வார்த்திபர், வாலிபர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் முதலிய யாவராலும் அவசியம்     செய்யத்தக்க தென்பது
கடவுளாணை யென்றறிய வேண்டும்.