Friday 16 November 2018

நல்வழி . 4.காலம் நோக்கிச் செய்க


எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
       புண்ணியம் வந்தெய்து போதல்லாற்-கண்ணில்லான்
       மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
       ஆங்கால மாகு மவர்க்கு.

யார்க்கும் - எத்தன்மையோர்க்கும், 
புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் - (முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழுதல்லாமல், 
ஒரு கருமம்-ஒரு -காரியத்தை, 
எண்ணி-ஆலோசித்து, செய்யொண்ணாது - செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது)
 கண் இல்லான்-குருடன், மாங்காய் விழ - மாங்காயை விழுவித்தற்கு, 
எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - எறிந்த மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் - புண்ணியம் வந்து கூடும் பொழுது, 
அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எளிதில் முடியும்.

புண்ணிய மில்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன்.

No comments:

Post a Comment