Friday 2 March 2018

பழைய ஆன்ம உரிமை

அருட்பெருஞ்ஜோதி !
                    அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
                      அருட்பெருஞ்ஜோதி !
              பழைய ஆன்ம உரிமை
               ***********************
           ஆன்மநேய தயவுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்;
       
         இவ்வுலகில் வாழ்வதற்கு என்று கடவுளால் சிருட்டிக்கப்பட்டுள்ள ஏழு பிறவிகளில் (தேவர், மனிதர்,நரகர்,
மிருகம்,பறவை,ஊர்வன,தாவரம்) உள்ள ஜீவராசிகள் எல்லாம் அவைகளுக்கு வழங்கப்பட்டுள்ள  அறிவிற்கு தக்கவாறு பிறவிகள் எடுத்துள்ளன ,
அவை ஓரறிவுள்ள தாவரம் தொடங்கி ஆறறிவுள்ள மனிதர்கள்வரை ,
ஒருவாறு சித்தர்களால் சொல்லப்பட்டுள்ள 84,00000 , பிறவிகளுக்கும் அவைகள் எடுத்துள்ள பிறவிகளுக்கு தக்கவாறு ஒவ்வொரு பெயர்வைத்து அழைக்கின்றோம்.

    ஏன் மனிதர்களுக்குக்கூட ஒவ்வொருவருக்கும் ஒருபெயர் வைத்து அழைக்கின்றோம்;

     ஆனால் இந்தப் பெயர்கள் எல்லாம் அவைகள் தேகம் எடுத்தப்பிறகு, 
அந்த உடலுக்காக வைத்து
அழைக்கப்படுகின்ற உடற் பெயர்களேயாகும்.

    அனைத்து ஜீவராசிளுக்கும் பிறப்பதற்கு முன்பு எந்தப்பெயர்களும் இல்லை என்பதும்,எல்லாரும் ஆன்மாக்கள் என்ற ஒரு பெயர்களோடுதான் இருக்கின்றோம் என்பதையும் அறிதல் வேண்டும்;

      ஆம் நாம் அனைவரும்........ , அனைவரும் என்றால்,
 ஓரறிவு தாவரம் தொடங்கி ஆறறிவு மனிதர்கள்வரை  அனைத்து ஜீவராசிகளுமே ஆன்மா என்ற ஓர் உறவோடுதான் பிறப்பதற்கு முன் இருந்தோம்;

    இம்மண்ணில் தேகம் பெற்று பிறந்த பிறகுதான் எடுத்த பிறவிக்குதக்கவாறு அடையாளத்திற்காக என்று ஓர் பெயரை வைத்துக்கொண்டு, பந்த பாசத்திற்கு அடிமையாகி நான், எனது, என்னுடையது என்று தற்போதத்துடன் அகங்கரித்து பிரிந்துகிடந்து வினைச்செயலாலும் மாயைச் செயலாலும் இன்ப துன்பத்தை அனுபவிக்கின்றோம்;

   ஆனால் நாம் அனைவரும் ,
சர்வசக்தியுடைய இயற்கை உண்மைக் கடவுளின் , பெருங்கருணையால்
இயற்கை உண்மை என்னும் ஒரே தன்மையுடன் ஏகதேசமாய் சிருட்டிக்கப்பட்டவர்கள் என்பதும்,
மற்றும் நாம் அனைவரும் ஆன்மாக்கள் என்ற சகோதர "உயிர் உறவுடையவர்கள் "என்பதையும்,
     
சகோதர்களுள் ஒருவர் ஆபத்தால் துக்கப்படும்போதும், அல்லது துக்கப்படுவார் என்று கேட்டபோதும், அறிந்தபோதும் ,அவர்கள் நமது" பழை ஆன்ம உரிமையுடைய" சகோதர உறவுகள் என்ற உரிமையுடனும் அவர்களுக்கு உதவ முன்வருதல்வேண்டும்;

உடம்பிற்குதான் பெயர் உண்டு,
உயிருக்கு எந்தப் பெயரும் இல்லை;
நாம் அனைவரும் ஆன்மாக்கள்,
ஆன்ம உறவுகள்,
ஆன்மநேயம் உடையவர்கள்;
நமக்குள் ஆன்ம உறவு என்ற சகோதரதன்மை உண்டு;
ஏன்என்றால் ஆன்மாக்களாகிய நமக்கு  கடவுள் என்ற தாயும் தந்தையும் ஒருவரே ஆகும்;


......நன்றி,
.......வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,
........பெருமான் துணையில்,
..........வள்ளல் அடிமை,
..............வடலூர் இரமேஷ்;

No comments:

Post a Comment